புதுடெல்லி: ஜியோ நிறுவனம், ஏர்டெல் நிறுவனத்தை 3ம் இடத்துக்கு தள்ளிவிட்டு, நாட்டின் 2வது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவாகியுள்ளது. முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் 2016 செப்டம்பரில் இருந்து தனது சேவையை துவக்கியது. குரல் அழைப்புகள் முதல் இணைய டேட்டா வரை அனைத்து சேவைகளையும் இலவசமாகவே வழங்கியது. இதில் டிவி, செய்தித்தாள், மாதாந்திர இதழ்கள் உட்பட பிரைம் சேவைகளும் அடக்கம். இதனால் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இதன் வரவால் ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்தன.