வாரணாசியில் பிரதமர் மோடி மெகா பேரணி...... மகனுடன் ஓபிஎஸ் பங்கேற்பு

வாரணாசி: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று மெகா பேரணி நடந்தது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று மாலை வாரணாசி வந்தார். பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து ஆதரவாளர்களுடன் மோடி 6 கி.மீ. தூரம் வரை பேரணியாக சென்றார். இதில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மண்டப்புரா மற்றும் சோனப்புரா பகுதிகளும் அடங்கும்.

இந்த பிரசார பேரணியில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களும், பாஜக ஆளும் மாநில  முதல்வர்களும் கலந்து கொண்டனர். இதேபோல் தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் பாகேற்றனர். வாரணாசியில் 2வது முறை போட்டியிடும் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அங்குள்ள கோயில்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. வழி நெடுகிலும்  சுவரொட்டிகள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: