சிவகாசி: சிவகாசி அருகே, குலை தள்ளும் நேரத்தில், சூறாவளி காற்றிற்கு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமடைந்ததால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். சிவகாசி பகுதியில் கடந்த சில நாட்களாக காற்றுடன் மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் லேசான மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக சிவகாசி அருகே வடபட்டி, ஈஞ்சார், வெள்ளையாபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் சூறாவளி காற்றோடு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் குலையோடு சாய்ந்தன. நன்கு குலை தள்ளிய நிலையில் இருந்த வாழை மரங்கள் காற்றுக்கு சாய்ந்து வீணாகியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வடபட்டியில் உள்ள ரணியன் என்பவரின் தோட்டத்தில் 6 ஏக்கரில் வாழை பயிரிட்டிருந்தார்.