சென்னை: தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இவற்றில் வருவாயை பெருக்குவதற்காக, கடந்த 2014ல் ஏப்ரல் 1ம் தேதி புதிய வழிகாட்டி மதிப்பு அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு ₹20 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று பதிவுத்துறை எதிர்பார்த்தது. ஆனால், வழிகாட்டி மதிப்பில் உள்ள குளறுபடி காரணமாக ஆண்டுக்கு ₹7 ஆயிரம் கோடி ஈட்டுவதே பெரும் சவாலாக இருந்தது. குறிப்பாக, வணிக பகுதி குடியிருப்பு பகுதியாகவும், குடியிருப்பு பகுதி விவசாய பகுதியாகவும், வணிக பகுதி சில இடங்களில் விவசாய பகுதி எனக்குறிப்பிடப்பட்டு உள்ளது.குறிப்பாக, வழிகாட்டி மதிப்பில் 10 ஆயிரம் இனங்களுக்கு மேல் தவறாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக பதிவுத்துறைக்கு புகார் வந்தது.இதன் மீது நடவடிக்கை எடுக்காமல், பத்திரபதிவை அதிகப்படுத்த வழிகாட்டி மதிப்பில் 33 சதவீதம் குறைத்து உத்தரவிட்டது. இதனால், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிபார்த்தது.