தஞ்சை: தஞ்சை மக்களவை மற்றும் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதையொட்டி வாக்காளர்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தஞ்சை குந்தவை நாச்சியார் அரசினர் பெண்கள் கல்லூரியில் மக்களவைக்கும், சட்டமன்றத்துக்கும் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு, வருவாய் துறையினர், போலீசார் என்று பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை டிஆர்ஓ ஜனனி சவுந்தர்யா பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் தரைதளத்தில் இருந்து முதல் தளத்தில் உள்ள ஒரு அறைக்கு நடந்து சென்றார். அப்போது திடீரென மயங்கினார்.