போபால்: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி விடுதலையான சாத்வி பிரக்யா சிங் தாகூருக்கு போபால் தொகுதியில் போட்டியிட பாஜ சீட் தந்துள்ளது.கடந்த 2008ல் மகாராஷ்டிராவின் மாலேகான் மசூதி அருகே குண்டுவெடித்தது. இதில் 6 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் சாத்வி பிரக்யா சிங் தாகூரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. 14 வயதில் துறவறம் பூண்ட பிரக்யா ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிசத் அமைப்புகளில் இருந்துள்ளார். மாலேகான் வெடிகுண்டு வழக்கில் இருந்து அவர் சமீபத்தில் விடுதலையானார்.