மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு ராமதாஸ் வாழ்த்து

சென்னை: மகாவீரர் ஜெயந்தி கொண்டாடும் சமண மதத்தினர் அனைவருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சரியான நம்பிக்கை, சரியான அறிவு, சரியான நடத்தை ஆகியவை தான் மனிதனை பாவச்செயல்களில் ஈடுபடாமல் தடுக்கிறது என்பது மகாவீரரின் போதனை ஆகும். இத்தகைய போதனைகளை போதித்த மகாவீரரின் பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த நன்னாளில் அவரின் போதனைகளை பின்பற்றி வாழவும், அவர் விரும்பியவாறு மது இல்லாத உலகம், அன்பு நிறைந்த மக்களை உருவாக்க நாம் உறுதியேற்போம். இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: