மோடி மீண்டும் பிரதமரானால் ஹிட்லர் ஆட்சிதான் : தமிமுன் அன்சாரி தாக்கு

ஆறுமுகநேரி: காயல்பட்டினத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மஜக சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மஜக மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ பேசியதாவது:தற்போது நடக்கவுள்ள தேர்தல் களம் என்பது மற்றவர்களுக்கு அரசியல் போட்டி களமாக இருக்கலாம். ஆனால் மஜக ஜனநாயகத்தை காப்பதற்கான அறப்போர் களமாக பார்க்கிறது. இஸ்லாமியர்களுக்கான சமூகநீதியை  மீட்டெடுப்பதற்கான களமாக கருதுகிறது.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்து பிரதமராகி விட்டால் இந்தியாவில் ஹிட்லர் ஆட்சிதான் நடக்கும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும். சர்வாதிகாரம் தலைவிரித்து ஆடிவிடும். சமூக நீதியையும்,  வேற்றுமையில் ஒற்றுமையையும் உடைக்க பாஜ திட்டமிடுகிறது. எனவேதான் இதனை சமூகநீதிக்கான போராட்டக்களமாக பார்க்கிறேன். நாட்டை பாதுகாக்க வேண்டும். இத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை வெற்றி பெறச் செய்வதன் மூலம் அறிவாற்றல் மிக்க ஆளுமை திறன் கொண்ட ஒருவரை தேர்ந்தெடுப்பது மட்டும் இன்றி மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.  ராகுல் பிரதமர் ஆவார். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: