சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே யானைகள் தோட்டத்தில் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தின. பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் யானை, மான் உள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, தீவன சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன. இந்நிலையில் நேற்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய 3 காட்டு யானைகள் கரிதொட்டம்பாளையம் கிராமத்திற்குள் நுழைந்து விவசாயி ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின.