ஆவடி: ஆவடி அருகே, சோதனை ஓட்டத்துக்கு கொண்டு சென்ற கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடி, காமராஜர் நகர், பட்டேல் தெருவில் ஆபிரகாம் (25) என்பவருக்கு சொந்தமான கார் சர்வீஸ் சென்டர் உள்ளது. இங்கு, அதே பகுதியை சேர்ந்த காமாட்சி ராஜா என்பவர், தனது காரை பராமரிப்பு பணிக்கு விட்டிருந்தார். பின்னர் அந்த காரை அம்பத்தூரில் உள்ள மற்றொரு தனியார் சர்வீஸ் சென்டரில் பழுது நீக்க ஆபிரகாம் விட்டிருந்தார். அங்கு, சீரமைப்பு பணி முடிந்ததும், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அந்த காரை சோதனை ஓட்டமாக அம்பத்தூரில் இருந்து புறவழிச்சாலை வழியாக ஆவடி வரை ஆபிரகாம் ஓட்டிவந்தார்.