பாட்னா: சகோதரர் தேஜஸ்வி யாதவுடன் ஏற்பட்ட மோதலால் புதிய கட்சி தொடங்கப் போவதாக கூறியிருக்கும் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், சரண் தொகுதியில் அவரது தாய் ரப்ரி தேவி போட்டியிட கேட்டுக் கொண்டுள்ளார். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிக்கிய ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. மக்களவை தேர்தலில் தேஜ் பிரதாப் யாதவ் தனக்கு வேண்டியவர்களுக்கு 2 சீட் கொடுக்குமாறு கேட்டதை தேஜஸ்வி புறக்கணித்தார். ஆனால், லாலு, அவரது மனைவி ரப்ரி தேவியும் ஏற்கனவே வெற்றி பெற்ற சரண் தொகுதியில், தேஜ் பிரதாப் யாதவின் மாமனார் சந்திரிகா ராயை வேட்பாளராக தேஜஸ்வி அறிவித்துள்ளார்.