டெல்லி: புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் போதவில்லை என்று இந்தியா அளித்த ஆதாரங்களை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இது குறித்து எதிர்வினையாற்றிய விமானப் படையின் தலைமைத் தளபதி ஏர்மார்ஷல் தனோவா, பாகிஸ்தான் கேட்கும் ஆதாரம் அதன் கண்முன்னே இருப்பதாக தெரிவித்தார். “உன் கண்முன்னே இருப்பதைப் பார்க்க மறுத்து முகத்தைத் திருப்பிக் கொள்கிறாய், ஆனால், அது காற்றில் வெடித்து உன் கண் முன்னே சிதறுகிறது” என்ற பிரபல பாப் பாடகர் பாப் டைலனின் கவிதை வரியை அவர் மேற்கோள் காட்டினார்.