காஷ்மீரில் வெடித்தது கார் சிஆர்பிஎப் வீரர்களுக்கு குறி?

நகர்: காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி ெஜய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, காஷ்மீரில் தீவிரவாதிகளை தேடி ஒழிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ரம்பான் அருகே பனிஹால் பகுதியில் சாலையோரத்தில் நேற்று கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

அந்த கார் திடீரென வெடித்து சிதறியது. சிஆர்பிஎப் வீரர்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் சென்ற சற்று நேரத்தில் இந்த கார் வெடித்து சிதறியதால் அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த சதி நடந்ததாக சந்தேகிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் சிலிண்டர் வெடித்து கார் சேதமடைந்ததை சிஆர்பிஎப் வீரர்கள் உறுதி செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: