நகர்: காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி ெஜய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, காஷ்மீரில் தீவிரவாதிகளை தேடி ஒழிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ரம்பான் அருகே பனிஹால் பகுதியில் சாலையோரத்தில் நேற்று கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.