மதுரை : மதுரையில் போலீஸ் தாக்கி இறந்ததாக கூறப்படும் சிறுவனின் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸ் திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று கார்த்திக்கை அடித்ததாக புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணைக்கு பிறகு வீட்டுக்கு வந்த சிறுவன் உடல்நிலை பாதித்து ஜனவரி 24-ம் தேதி இறந்துவிட்டான். இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் சி.பி.சி.ஐ.டிவிசாரணையை முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.