சென்னை: ஏழுகிணறு, போர்ச்சுகீஸ் சர்ச் தெருவில் வசிப்பவர் ஆறுமுகம் (64) ஓய்வு பெற்ற அரசு மருத்துவரான இவர், தற்போது வீட்டில் கிளினிக் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை ஆறுமுகம் கிளினிக்குக்கு நோயாளி போல வந்த ஒரு நபர், மருத்துவர் அசந்த நேரத்தில் அவரது விலை உயர்ந்த செல்போனை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கொருக்குபேட்டை மீனாம்பாள் நகரை சேர்ந்த உமர் (48) என்பவரை போலீசார் கைது ெசய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
* பம்மல், முத்தமிழ் நகரை சேர்ந்தவர் ராம் (55). இவரது மனைவி அருணா (50). இவர்களது மகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ராம், கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதனால், விரக்தியில் இருந்த அருணா நேற்று காலை வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.