புதுடெல்லி: வாக்களிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என பிரபலங்களுக்கு பிரதமர் மோடி டிவீட் செய்துள்ளார். மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார். கடந்த 13ம் தேதி அன்று கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சி தலைவர்களுக்கும், பிரபலங்களுக்கும், அவர் டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்தார். அரசியல் தலைவர்கள் மம்தா பானர்ஜி, சரத்பவார், மாயாவதி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாவ், மு.க.ஸ்டாலின் உட்பட பலருக்கு அவர் டிவிட்டரில் தகவல் அனுப்பி வரும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க மக்களை ஊக்குவிக்க வேண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் அவர் நேற்று தனது ‘சவுகிதார் நரேந்திர மோடி’ என்ற டிவிட்டர் முகவரியிலிருந்து, அரை மணி நேரத்தில் நாட்டு மக்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலருக்கு 16 தகவல்களை அனுப்பினார்.