ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட உராங்குட்டான் குரங்கு குட்டி பறிமுதல்

பாலி: இந்தோனேஷியாவில் அறிய வகை உராங்குட்டான் வகை குரங்கை சூட்கேசில் அடைத்து கடத்த முயன்ற ரஷ்ய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலி தீவில் உள்ள குராறாய் விமானநிலையத்தில் ரஷ்ய பயணியை குடியுரிமை  அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் அவர் வைத்திருந்த சூட்கேசை எக்ஸ்ரேய் மூலம் பரிசோதனை செய்தபோது அதில் உயிருள்ள பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.அதனை தொடர்ந்து சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் 2 வயதான அறிய வகை உராங்குட்டான் குரங்கு குட்டி இருந்தது. இதையடுத்து குரங்கை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்தி சென்ற ரஷ்யாவை சேர்ந்த ஜிஸ்க்கோ ஆண்ட்ரி என்பவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: