சென்னை: சொத்துவரி உயர்த்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வரி உயர்வு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாநகராட்சி, நகராட்சி, நகர பஞ்சாயத்துகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்துவரியை 50 சதவீதமும், குடியிருப்பு அல்லாத பகுதிகளுக்கு 100 சதவீதமும் உயர்த்தி கடந்த 2018 ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையின் அடிப்படையில் திருவண்ணாமலை நகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எ.வ.வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.