சேலம் பாமக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம் : மா.செயலாளர், நிர்வாகிகளும் கூண்டோடு விலகினர்

சென்னை : சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் எம்எல்ஏவும் உட்பட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். சேலத்தில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் மாற்றுக கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் ஓமலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ தமிழரசு, பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.  

புதிதாக சேர்ந்தவர்களை வரவேற்று வாழ்த்துக் கூறிய ஸ்டாலின், அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் திமுக செயற்படும் என்று தெரிவித்தார். இதேபோல் தேமுதிக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் தாங்கள் சார்ந்த கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் வன்னியர் கூட்டமைப்பைனர் ஸ்டாலினை சந்தித்து மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: