‘பெருந்தொகை தர்றேன்னு ஜெயலலிதா சொன்னார்’ பாமக தலைவர் ஜி.கே.மணி புது குண்டு

பாமக தலைவர் ஜிகே மணி சேலத்தில் நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சொன்ன தகவல் எல்லாரையும் அதிர வைத்தது. அப்படி  என்ன தான் சொன்னார்? இதோ  அவர் பேசியது: அசாத்தியமான துணிச்சல் மிக்க தலைவராக ஜெயலலிதா திகழ்ந்தார் என்று ராமதாஸ் என்னிடம் கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மூக்கில் விரல் வைக்கும் வகையில் நல்லாட்சி செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிறப்பான கூட்டணியையும் அமைத்துள்ளார்.  

ஜெயலலிதா ஒருமுறை தன்னை சந்திக்க வருமாறு என்னை அழைத்தார். நானும் சென்றேன். அப்போது அன்பாக பேசிய அவர், நீங்கள் துட்டு சம்பாதிக்கவில்லையே என்றார். அப்போது எனக்கு கண்ணீர் வந்து விட்டது. குடும்பத்தை கவனித்துக்கொள்ள பெரும் தொகையை தருவதாக கூறினார்’’ என்றார்.  இவர் பேசப் பேச உணர்ச்சி வயப்பட்டார். ஆனால், கேட்ட தொண்டர்கள் அதிர்ந்து விட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: