இந்தியாவில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் மிக பெரிய பிரச்னையை சந்திக்கும்... அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: தீவிரவாத விஷயத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் மிக பெரிய பிரச்னையை சந்திக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் அமைப்புகள் மீது கடுமையாக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் மீண்டும் பதற்றம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், ஜெய்ஷ் - இ - முகமது, லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதிகள்  இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் மிகப்பெரிய பிரச்னையை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத குழுக்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் அலுவலகத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என  வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: