கடலூர்: கடலூர் கடற்கரை சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 12ம் வகுப்பு உயிரியல் படித்த மாணவர்கள் தங்களது அரசுப் பொதுத்தேர்வின் கடைசி தேர்வை நேற்று எழுதினர். தேர்வுக்குபின், மாணவர்கள் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு 5 பேர் குளித்துக் கொண்டிருந்த நிலையில், சிலர் கடற்கரையில் அமர்ந்திருந்தனர்.