திருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனத்துக்காக மேலும் 6 பெண்கள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில தினங்களாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து இளம் பெண்கள் தரிசனத்துக்கு வருகின்றனர். இவர்களை கர்மசமீதி தொண்டர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கின்றனர். கடந்த 4 தினங்களில் மட்டும் ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த 6 இளம் பெண்கள் தரிசனத்துக்கு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆந்திராவில் இருந்து 30 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். இவர்களில் 6 இளம் பெண்களும் இருந்தனர். பம்பையை தாண்டி அவர்கள் சன்னிதானத்துக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.