நீலகிரி : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயன், மனோஜ் உள்பட 10 பேர் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 2017ம் ஆண்டு ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் காவலாளி கொலை செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மார்ச் 27ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.