மதுரை : ஆக்கிரமிப்பில் உள்ள ரயில்வே நிலங்கள், அதனை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க இடைக்கால தடை கோரிய வழக்கில், தென்னக ரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 20ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.