சென்னை : டிஜிபியாக டி.கே.ராஜேந்திரனின் பணிநீடிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார் என்பதால், அவரது பணிநீடிப்பை ரத்து செய்யக்கோரி மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.