மதுரையில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கண்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்டெய்னர் லாரியில் ஏராளமான நகைகள் பெட்டி பெட்டியாக இருந்ததால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கன்டெய்னர் லாரி சீல் வைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகள், காவல்துறை துணை ஆணையர் உள்ளிட்டோர் மதுரை ஆட்சியர் அலுவலத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.