திருமலை: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சின்னம் என்பதால் அனைத்து அரசு அலுவலகங்களில் தேர்தல் முடியும் வரை மின்விசிறிகளை அகற்ற வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் தெலுங்கு தேசம் கட்சியினர் புகார் செய்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம் தொகுதியில் கடந்த 6 முறைகளுக்கு மேல் முதல்வர் சந்திரபாபு நாயுடு போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இந்நிலையில் குப்பம் தெலுங்கு தேசம் கட்சியினர் நேற்று மண்டல தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர். அதில், `ஆந்திராவில் முக்கிய கட்சிகளில் ஒன்றான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சின்னம் மின் விசிறி என்பதால் தேர்தல் முடியும் வரை வாக்காளர்களின் எண்ணத்தை திசை திருப்பும் விதமாக அரசு அலுவலகங்களில் பயன்படுத்தக் கூடிய மின் விசிறிகளை அகற்ற வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.