சென்னை: ஆந்திராவில் நடக்க இருக்கும் தேர்தலையொட்டி, திருத்தணி முருகன் கோயிலுக்கு நடிகை ரோஜா குடும்பத்துடன் வந்து வழிபட்ட, பின்னர் ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தை துவங்கினார்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன், ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 11ம் தேதி முதல் கட்டமாக நடக்க இருக்கும் தேர்தலில், ஆந்திரா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரசாரம், அங்கு சூடு பிடித்துள்ளது. அம்மாநில ஆளும் கட்சியாக உள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும் சாவலாக, பிரதான எதிர் கட்சியான ஓய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. இதனால், ஆட்சி யார் பிடிப்பது என்பதில், அங்கு கடும் போட்டி நிலவுகின்றது.