சென்னை: பாஜகவில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கைக்கு வேட்பாளர்கள் தயாராக இருக்கின்றனர். கோவை, ராமநாதபுரம் தொகுதியை பிடிக்க பாஜகவினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 5 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த தொகுதிகளில் பாஜகவினர் தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளனர். தூத்துக்குடி தொகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கை தொகுதியில் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்படுகின்றனர். இவர்கள் 3 பேரும் தொகுதிகளில் இறங்கி பணி செய்ய தொடங்கியுள்ளனர். மீதியுள்ள 2 தொகுதிகளில் யார் வேட்பாளர் என்பதில்தான் கடும் போட்டி நிலவி வருகிறது. கோவை தொகுதிக்கு முன்னாள் பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜ பொது செயலாளர் வானதி சீனிவாசன் இடையே தான் போட்டி நிலவி வருகிறது. எப்படியாவது தொகுதியை பிடித்து விட வேண்டும் என்பதில் 2 பேரும் உறுதியாக இருந்து வருகின்றனர். இதற்கான பணிகளில் அவர்கள் இறங்கியுள்ளனர். இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் கட்சி மேலிடத்தில் நல்ல தொடர்பில் இருந்து வருகிறார்.
கோவை, ராமநாதபுரம் தொகுதியை பிடிக்க பாஜகவினரிடையே கடும் போட்டி: தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கைக்கு வேட்பாளர் ரெடி
- போட்டி
- தொகுதியில்
- பாஜக
- வேட்பாளர் வேட்பாளர்
- ராமநாதபுரம்
- கோயம்புத்தூர்
- சிவகங்கை
- தூத்துக்குடி
- கன்னியாகுமாரி