தொழிற்சாலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

புழல்: சோழவரம் அருகே பாடியநல்லூரில் அலுமினிய பொருட்களை உருக்கி மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் அதனை மூட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: