ஷா ஆலம்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரர், கிம் ஜாங் நம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரு பெண்களில் இந்தோனேஷிய பெண்ணை மலேசிய நீதிமன்றம் நேற்று விடுவித்தது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மூத்த சகோதரர் கிம் ஜாங் நம். வாரிசுப்படி வடகொரியாவின் முக்கிய தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால் சில பிரச்னைகளால் கடந்த 2003ம் ஆண்டு வடகொரியாவை விட்டு வெளியேறினார். அதன்பின் கடந்த 2010ம் ஆண்டு இவரது இளைய சகோதரர் கிம் ஜாங் உன் அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், கிம் ஜாங் நம், கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேஷியாவின், கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது இவர் அருகே வந்த இரு பெண்கள் ‘வி.எக்ஸ்’ என்ற ரசாயன விஷத்தை ஸ்பிரே செய்துவிட்டு சென்றனர். அடுத்த சில நொடிகளில் அவர் இறந்தார். அவர்கள் வியட்நாம் மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்த இரு பெண்கள் என விசாரணையில் தெரிந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘‘டி.வி காமெடி நிகழ்ச்சிக்கு இது போல் நடிக்கும்படி சிலர் கூறியதால் செய்தோம்’’ என கூறினர்.