சாத்தூர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாய் அசைத்தால் வரலாறு; நாவசைத்தால் புறநானூறு, இதுதான் விதி என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிரடி பேட்டி அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் அதிமுக அரசால் மட்டுமே முடியும். ஏழை, எளிய மக்கள் பயன்பெறவே, அதிமுக - பாஜ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் மக்கள் நீதி மய்யம் கிடையாது. எடப்பாடி வாய் அசைத்தால் வரலாறு; நாவசைத்தால் அது புறநானூறு. இதுதான் விதி. கடவுள் என்னும் முதலாளி கண்டு எடுத்த தொழிலாளி எடப்பாடி. அவர் சொன்னா சொன்னதுதான். அவர் ஒரு தடவை சொன்னா; நூறு தடவை சொன்ன மாதிரி. டிடிவி தினகரனின் அமமுக கவலைக்கிடமாக உள்ளது.