சென்னை: 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் என்னுடைய ஆதரவு இல்லை என்றும் ஏற்கெனவே நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். மேலும் என்னுடைய படங்களையும் இயக்கக் கொடியை எவரும் பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார். அதற்கு முன்னதாகவே சட்டப்பேரவையே என் இலக்கு என்று தெரிவித்திருந்த ரஜினிகாந்த், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தண்ணீர்ப் பிரச்சினையை எந்தக் கட்சி தீர்ப்பதாகச் சொல்கிறதோ அந்தக் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று சூசகமாகத் ரஜினி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று மாலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. மேலும் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் சேர்ந்து நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் அதையும் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்றும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.