சேலம்: தமிழகத்தில் 3, 4, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம், வரும் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை, அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித்துறைக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் 2, 7, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி ஏப்ரல் இறுதியில் முடிவடையும். மேலும், அடுத்த கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய 3, 4, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குரிய முதல் பருவத்திற்கான பாடபுத்தகங்களும், ஏப்ரல் இறுதிக்குள் வழங்க முடியும்.