வாஷிங்டன்: இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக தகுதியை நிறுத்தப் போவதாக அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் மதுபானங்கள், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு இந்தியா 100 முதல் 150 சதவீதம் வரை கடுமையான வரிவிதிப்பதாக அண்மையில் டிரம்ப் புகார் கூறியிருந்தார். இந்நிலையில், அமெரிக்க எம்பிக்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், இந்திய சந்தையில் அமெரிக்கப் பொருட்களுக்கு நியாயமான வர்த்தகம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் ஜிஎஸ்பி புரோகிராம் என்ற வளரும் நாடுகளுக்கான சிறப்பு வர்த்தக சலுகைகளை நிறுத்தப் போவது குறித்து இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.