புழல்: புழல் காவலர் குடியிருப்பில் பூச்சிமருந்து குடித்து போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் பிரபு (26). சென்னை புழல் சிறை போலீஸ்காரர். புழல் குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சிறை கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்று கொடுத்து அதன் மூலம் பணம் பெற்று வந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்பந்தமாக சிறைத்துறை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரிடம் விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் அவரை சஸ்பெண்ட் செய்தது. பின்னர் பணிக்கு திரும்பிய லிவிங்ஸ்டன் மீண்டும் சிறை கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்று கொடுத்து பணம் பெற்றதாக தெரிகிறது.