சென்னை: நமக்கு நாமே பாதுகாப்பு எனவும், தற்காப்பு என்பது பெண்களுக்கு அவசியம் எனவும், சமூக வலைதளங்களை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும் என நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறினார். மேலும் சரத்குமாரின் அரசியலுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை எனவும், அரசியலை நன்கு கற்றுக்கொண்ட பிறகு சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன் எனவும் தெரிவித்தார்.