ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் அம்மாநிலம் மழுவதும் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இன்னும் 2 நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதற்கேற்றப்படி காஷ்மீர், ஜம்மு பகுதிகளில் பனிக்கட்டி மழை தொடர்கிறது. இதனால் திரும்பும் திசையெங்கும் வெள்ளாடை போர்த்தியது போல பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. வெப்பநிலை மைனஸ் 4 டிகிரி செல்சியஸ்-க்கு கீழே இருப்பதால் சாலைகளில் பனிப்படர்ந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.