அம்பத்தூர்: அம்பத்தூர், காமராஜபுரம் காவல் நிலையம் பின்புறத்தில் ஒரு வாலிபர் துப்பாக்கியுடன் தெருவில் சுற்றிக் கொண்டிருப்பதாக சென்னை மேற்கு மண்டல இணை ஆணையாளர் விஜயகுமாரிக்கு நேற்று மாலை ரகசிய தகவல் வந்தது. அவரது உத்தரவின்பேரில் அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் எஸ்.ஐ கோபி, ஏட்டுக்கள் பலராமன், தாமோதரன் ஆகியோர் வாலிபரை தேடினர். இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் வாலிபரை அதே பகுதியில் தனிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்து, சோதனை செய்தபோது, பாக்கெட்டில் ஒரு துப்பாக்கியும், 8 தோட்டாக்களும் இருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டக்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் பாபு (19) என்பதும், இவர் அம்பத்தூர் காமராஜபுரம், பெரியார் தெருவில் வசித்து வருகிறார். இவர், கடந்த டிசம்பர் மாதம் அம்பத்தூர் பகுதியில் பேட்டரி திருடிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டவர். கடந்த மாதம் தான் ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். அதுமட்டுமின்றி, தினமும் அம்பத்தூர் காவல் நிலையம் வந்து கையெழுத்திட்ட செல்கிறார்.