கோவை: கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு செலுத்திய ரத்தத்தில் எச்.ஐ.வி. தொற்று இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைக்கு ரத்தம் தந்தவரை பரிசோதித்ததில் எச்.ஐ.வி. இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக கூறினார். குழந்தைக்கு உயர்சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படம் என கூறினார்.