ஸ்ரீநகர்: மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புல்வாமா தாக்குதல் நடந்த ஒரு வாரத்தில் மீண்டும் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த தொலைபேசி பேச்சை குறுக்கிட்டு கேட்ட போது சதி அம்பலமாகியுள்ளதாக கூறப்படுகிறது.