சென்னை சட்டப்பல்கலை பேராசிரியர்கள் நியமன விவகாரம் 32 பேர் கல்வித்தகுதி குறித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து: ஐகோர்ட் உத்தரவு Feb 21, 2019 ரத்து வல்லுநர் ரத்துசெய்தல் கேனான் சென்னை: தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பணியாற்றிய டி.சங்கர், தன்னை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், போதிய கல்வித் தகுதி இல்லாமல் பணியாற்றும் 32 பேராசிரியர்கள், தங்களின் கல்வித் தகுதி, நியமனம் குறித்த தகவல்களை பதில் மனுக்களாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து, பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தனி நீதிபதி, வழக்கின் எல்லையை மீறி தன் விருப்பம் போல உத்தரவுகளை பிறப்பித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து, அவருக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, சட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனங்கள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிகளுக்கு உட்பட்டுதான் நடக்கிறது என்றார்.இதைக்கேட்ட நீதிபதிகள், சட்டபல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனம் எப்படி நடக்கிறது என்று எங்களுக்கு தெரியும் என்றனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தன. இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர்.தீர்ப்பில், 32 பேராசிரியர்களின் நியமனம் மற்றும் கல்வித் தகுதி தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தனி நீதிபதி வழக்கின் எல்லையைத் தாண்டி உத்தரவிடமுடியாது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர். பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்
ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 1 மணிநேரம் தாமதம்: எம்பி, எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்