ஜெய்ப்பூர்: எதிர்க்கட்சி கூட்டணி தலைவரின் பெயரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவிக்க வேண்டும் என்று பாஜ தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அடுத்து பாஜ தலைவர்கள் தங்களது அரசியல் நிகழ்ச்சிகளை ரத்து செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று அவர்கள் தங்களது நிகழ்ச்சிகளையும், பிரசாரங்களையும் தொடங்கினர். ராஜஸ்தானில் நடந்த பாஜ கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில், “பிரதமர் மோடி தலைமையிலான அரசு, புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களின் தியாகத்தை வீணாக போகவிடாது. தீவிரவாதத்துக்கு எதிரான கொள்கையில் அரசு பூஜ்ஜியம் அளவுக்கு கூட சமரசம் செய்து கொள்ளாது.