நாக்பூர்: டெல்லியில் இருந்து சென்னை சென்ற ரயிலில் ரூ.67.50 லட்சம் சிக்கியது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். டெல்லி-சென்னை இடையேயான கிராண்ட் டிரங்(ஜி.டி.) எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் பகல் 12.30 மணியளவில் நாக்பூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புர்ணானந்த் மிஸ்ரா(48) என்பவர் வைத்திருந்த ஒரு பெரிய பார்சல் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால், போலீசார் அந்த பார்சலை திறந்து சோதித்த போது அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதனையடுத்து, போலீசார் பணம் இருந்த பார்சலை கைப்பற்றிய போலீசார், புர்ணானந்த் மிஸ்ராவை கைது செய்து, ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.