ஆத்தூர் அருகே அரசு பேருந்தை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம்

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நைனார்பாளையத்தில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏழைகளுக்கு ரூ.2000 நிதி வழங்குவதில், பெயர் சேர்ப்பதில் குளறுபடி என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள தங்கள் பெயர்களையும் பட்டியலில் சேர்க்கக்கோரி கிராமத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: