நண்பனை காப்பாற்ற முயன்றபோது ரயில் மோதி பெயின்டர் பலி

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, தாயுமான் ெசட்டி தெருவை சேர்ந்தவர் அரவிந்த் (25), தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்த அரவிந்த், தனது நண்பன் தேவமா நகரை சேர்ந்த பெயின்டர் வெங்கடேஷ் (25) என்பவருக்கு வாட்ஸ்அப்பில் தகவல் ஒன்றை அனுப்பினார்.

அதில், ‘‘நான் பொன்னேரி தேரடி தெரு ரயில்வே மேம்பாலத்தில் இருந்து ரயில் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்,’’ என தெரிவித்து இருந்தார். பதறிப்போன வெங்கடேஷ் சம்பவ இடத்துக்கு சென்றார். அங்கு, அவ்வழியே வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொளள அரவிந்த் தயாராக இருந்தார். அரவிந்தை காப்பாற்றுவதற்காக அவரை, வெங்கடேஷ் வேகமாக இழுத்து தள்ளிவிட்டார். அப்போது, நிலைதடுமாறி வெங்கடேஷ் தண்டவாளத்தில் விழுந்ததால், ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உடல் துண்டாகி பலியானார். அரவிந்த் படுகாயத்துடன் உயிர் தப்பினார். அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: