கோட்டூர்புரம், அபிராமபுரத்தில் 1,391 சிசிடிவி கேமரா

சென்னை: சென்னை கோட்டூர்புரம் மற்றும் அபிராமபுரத்தில் 1,391 சிசிடிவி கேமரா இயக்கத்தை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை முழுவதும் மூன்றாவது கண் என்ற திட்டத்தின் கீழ் மாநகரம் முழுவதும் உள்ள 12 காவல் மாவட்டங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.  அதன் தொடர்ச்சியாக மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் உள்ள கோட்டூர்புரம் காவல் சரகத்தில் அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 846 சிசிடிவி கேமராக்கள் மற்றும் கோட்டூர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 545 என மொத்தம் 1,391 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிசிடிவி சேவையை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் மயில்வாகணன் உதவி கமிஷனர் சுதர்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: