சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 8, 8.20, 8.40, 9, 9.20, 9.40, 9.50, 10, 10.20, 10.40, 11, 11.20, 11.40, 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40 ஆகிய நேரங்களில் வேளச்சேரி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பிற்பகல் 2 மணியில் இருந்து சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை ரயில்கள் இயக்கப்படும்.
அதேப்போல், வேளச்சேரியில் இருந்து காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30, 10.40, 10.50, 11.10, 11.30, 11.50, 12.10, 12.30, 12.50, 1.10, 1.30 மற்றும் 1.50 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பிற்பகல் 2 மணியில் இருந்து வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவடி- அரக்கோணம் வழித்தடம்: மூர்மார்கெட்டில் இருந்து திருத்தணி வரை இயக்கப்படும் மின்சார ரயில் மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி வரை ரத்து செய்யப்பட்டு நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆவடி முதல் திருத்தணி வரை இயக்கப்படுகிறது. மேலும் அரக்கோணம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருவள்ளூர் முதல் மூர்மார்க்கெட் வரையும், பட்டாபிராம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருத்தணி முதல் மூர்மார்க்கெட் வரை இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டு ஆவடி முதல் மூர்மார்க்கெட் வரை இயக்கப்படுகிறது.