திருச்சுழி: திருச்சுழி அருகே 95 ஆடுகளை விலைக்கு விற்றுவிட்டு திருடுபோனதாக நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சவ்வாசுபுரத்தை சேர்ந்த ராமு மகன் சத்தியமூர்த்தி (35). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த காளியப்பன் சில வருடங்களுக்கு முன்பு 250 செம்மறி ஆடுகளை வளர்க்க கொடுத்திருந்தார். பாதுகாப்பு வேலியில் அடைத்திருந்த 95 ஆடுகளை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டதாக காளியப்பனிடம் தெரிவித்துள்ளார். பின் இதுகுறித்து திருச்சுழி போலீசில் சத்தியமூர்த்தி கடந்த வாரம் புகார் செய்தார். போலீசார் பல இடங்களில் தேடியும் ஆடுகளை காணவில்லை.
சத்தியமூர்த்தி சந்தேகம் ஏற்படவே அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.